திருக்கணித பஞ்சாங்கம்
home முகப்பு today தின காலண்டர் calendar_month மாத காலண்டர்
திவசம் கணிப்பான் | NRI Thivasam Calculator in Tamil

திவசம் & சிரார்த்தம் கணிப்பான்

வெளிநாட்டில் வசிப்பவர்கள் (NRI) பிறந்த ஊர் மற்றும் வசிக்கும் ஊரின் நேர மண்டலத்தைப் பயன்படுத்தி துல்லியமான திவச தேதியைக் கண்டறியலாம்.

இறந்த விவரங்கள் (Death Info)
இறந்த ஊர் (Death Location) *
இறந்த தேதி *
இறந்த நேரம் *
திவசம் செய்யும் விவரங்கள் (Ritual Info)
திவசம் செய்யும் ஊர் (Ritual Location) *
எந்த வருடத்திற்கு? *

திவசம் (சிரார்த்தம்) என்றால் என்ன?

இந்து சாஸ்திரங்களின்படி, நம்மைப் பெற்றவர்களோ அல்லது முன்னோர்களோ இவ்வுலகை விட்டுப் பிரிந்த நாளை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு வருடம் தோறும் செய்யப்படும் பித்ரு கடமையே திவசம் அல்லது சிரார்த்தம் (Death Anniversary) எனப்படும். இதைச் செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைத்து குடும்பம் தழைக்கும் என்பது ஐதீகம்.

ஏன் ஆங்கிலத் தேதியில் திவசம் செய்யக் கூடாது?

ஆங்கில நாட்காட்டி (Gregorian Calendar) என்பது சூரியனின் ஓட்டத்தை மட்டும் மையமாகக் கொண்டது. ஆனால் இந்து தர்மத்தின்படி, ஒரு மனிதனின் ஜனனமும் (பிறப்பு) மரணமும் சந்திரன் மற்றும் சூரியனின் கூட்டமைப்பால் உருவாகும் 'திதி' அடிப்படையிலேயே நிகழ்கிறது. எனவே, ஒருவர் இறந்த நேரத்தில உள்ள தமிழ் மாதம் மற்றும் வளர்பிறை/தேய்பிறை திதியை வைத்தே ஒவ்வொரு வருடமும் சிரார்த்தம் செய்யப்பட வேண்டும்.

இந்தியா மற்றும் வெளிநாடு (NRI) நேர வேறுபாடு கணக்கீடு

இந்தக் கணிப்பானின் சிறப்பம்சமே, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான (NRI) நேர வேறுபாட்டைக் (Timezone) கணக்கிடுவதுதான். சாஸ்திரப்படி, திதி மற்றும் மாதம் என்பது ஒருவர் இறந்த இடத்தின் நேரப்படியே (Death Location) கணிக்கப்பட வேண்டும். ஆனால், அடுத்த வருடம் அந்தத் திதியை அனுசரிக்கும் போது, மகன் திவசம் செய்யும் நாட்டின் நேரப்படியே (Ritual Location) திதி எப்போது தொடங்குகிறது மற்றும் முடிகிறது என்பதைக் கணக்கிட்டு மதிய நேரத்தில் (அபரான்ன காலம்) செய்ய வேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

நான் இந்தியாவில் பிறந்தேன், தற்போது அமெரிக்காவில் உள்ளேன். திவசத்தை எப்படி கணக்கிடுவது?

கவலை வேண்டாம்! இந்தக் கருவியில் உள்ள 'இறந்த ஊர்' என்பதில் இந்தியாவின் ஊரையும், 'திவசம் செய்யும் ஊர்' என்பதில் அமெரிக்காவின் ஊரையும் தேர்ந்தெடுங்கள். எங்கள் சிஸ்டம் தாமாகவே இரண்டு நாடுகளின் நேர மண்டலத்தையும் கணக்கிட்டு, அமெரிக்க நேரப்படி நீங்கள் எந்தத் தேதியில், எந்த மணிக்குத் திவசம் செய்ய வேண்டும் என்று துல்லியமாகக் காட்டும்.

அபரான்ன காலம் (Aparahna Kalam) என்றால் என்ன?

பகல் பொழுதை 5 சம பாகங்களாகப் பிரித்தால், அதில் வரும் 4-வது பாகமே 'அபரான்ன காலம்' ஆகும். இது தோராயமாக மதியம் 1:00 மணி முதல் 3:30 மணி வரை இருக்கும். சிரார்த்தம் செய்வதற்கு இதுவே மிகச் சிறந்த நேரமாகும். இந்தக் கணிப்பான், திதி இந்த அபரான்ன காலத்தில் எப்போது வியாபித்திருக்கிறதோ, அந்த நாளையும் தானாகவே கணக்கிட்டுத் தந்துவிடும்.

இரண்டு நாட்கள் ஒரே திதி வந்தால் எதை எடுப்பது?

ஒரு திதி இரண்டு நாட்கள் நீடித்தால் அல்லது ஒரு நாளில் திதியே இல்லாமல் போனால் (திதி சூனியம்/விருத்தி), அபரான்ன காலம் (மதிய நேரம் 1:00 முதல் 3:30 வரை) எனப்படும் சிரார்த்த நேரத்தில் எந்த திதி உள்ளதோ அதையே திவச நாளாக எடுக்க வேண்டும்.

ஒரே தமிழ் மாதத்தில் இரண்டு முறை திதி வந்தால் என்ன செய்வது?

சில ஆண்டுகளில் (உ-ம்: மல மாதம்) ஒரே தமிழ் மாதத்தில் ஒரு திதி இரண்டு முறை வரும். சாஸ்திர விதிப்படி, இரண்டாவதாக வரும் நாளையே சிரார்த்த தினமாக (திவசம்) எடுத்துக் கொள்ள வேண்டும்.